Thursday 7 April 2016

தியானத்திற்கு தடை மனமே - OSHO

  
நீங்கள் கண்களை மூடி தியானம்
செய்ய ஆரம்பத்தீர்கள் என்றால்
சிறிது நேரத்தில் சோர்வு வரும் , சலிப்பு வரும் ,
உடனே கண்ணை திறக்க வேண்டும் என்கிற ஆர்வம்
வரும் . உங்களால் சிறுது நேரம் கூட கண்ணை மூடி
உட்கார முடியாது .. காரணம் என்ன ,
நீங்கள் தியானம் செய்ய ஆரம்பிக்கும் கணம்
மனம் மரிக்கும் கணம் ஆரம்பமாகி விடுகிறது .
தான் மரிக்காமல் இருக்க அது பல வித்தைகளை ,
பல காரணங்களை எழுப்பி உங்களை தியானம்
செய்ய விடாது .. நீங்களும் தியானம் செய்ய முடியவில்லை ,
தியானத்தில் உட்கார்ந்தால் தான் சோர்வு , சலிப்பு ,
வருகிறது என்று நினைத்து எழுந்து விடுவீர்கள் ..
இவையெல்லாம் மனம் தான் மரிக்காமல் இருக்க
செய்யும் அதன் தந்திரம்
இந்த மனதின் தந்திரத்திலேயே பலர் வீழ்ந்து விடுகின்றனர் .
இதிலேயே தான்
பெரும்பாலனோர் தியானம் அமைகிறது.
இந்த நிலையில் நான் தினமும் தியானம் செய்தும்
எனக்கு நிம்மதி , மகிழ்ச்சி இல்லை என்று நினைக்கின்றனர்.
இந்த மனதை தாண்டாமல் நீங்கள் என்ன செய்தாலும் அது
தியானமே ஆகாது .
மனம் செய்யும் வித்தைகளை எல்லாம்
நீங்கள் வெறுமனே கவனித்துக் கொண்டே இருந்தால்
மனம் அடங்கி விடும் .. உங்களுக்கு ஒரு நல்ல சேவகனாக
மனம் மாறிவிடும் . .. இப்போது மனம் மூலம் செயல்படும்
தியானத்திற்கு பிறகு நீங்கள்
மனதை ஒரு கருவியாக செயல்படுத்துவீர்கள் .
அப்போது உங்களுக்குள் இது நாள் வரை இருந்த துயரம்,
துக்கம், மன அழுத்தம் , போர் தன்மை , சலிப்பு
எல்லாம் ஆவியாக மறைந்து விடும்.
கொண்டாட்டம்,ஆனந்தம் என்கிற வார்த்தையின்
உண்மையான பொருள் அப்போது புரிய வரும் .
நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் நீங்கள்
எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் ,
உங்களுக்கு வாழ்வே மகிழ்ச்சிகரமாக , ஆனந்தகரமாக
கொண்டாட்டமாக இருக்கும்

No comments:

Post a Comment