Friday 10 June 2016

வண்ணமயமான வாழ்க்கை

சூரியனின் ஒளி, வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம்போலத் தோன்றும். அது, எல்லா நிறங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சூரிய
ஒளியில் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்கள் உள்ளன. இந்நிறங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே
எடுத்து அது அதற்குரிய அளவின்படி சேர்த்துக் குழைத்தால், இறுதியில் வெண்மை நிறம் தோன்றுவதைக் காணலாம்.
சூரியவொளியில் ஏழு நிறங்கள் அடங்கியிருப்பதை அறிந்த முன்னோர்கள், அதனை வெளிப்படையாகக் கூறாமல், அறைத்துக் கூறினார்கள்.
சூரியன் பவனி வருகின்ற தேரில் ஏழு குதிரைகள் பூட்டியிருப்பதாகக் கூறியுள்ளது, சூரியவொளியில் ஏழுவண்ணங்கள் இருப்பதைக் குறிப்பதாகும்.
சூரியனின் தேருக்கு ஒரு சக்கரம் மட்டுமே என்பது, உலகம் என்பதையும் அது உருண்டு கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பதாகும்.
மனிதவுடம்பிலுள்ள புறவுறுப்புகளும் அகவுறுப்புகளும் ஏழுவகை நிறங்களோடு கூடியிருக்கின்றன. உடல் உறுப்புகள் செழிப்பதாகவும்
செம்மையாகவும் இருக்கும் போது, உறுப்புகளின் நிறங்களும் செம்மையாக இருக்கும். உறுப்புகள் நோய்க்குள்ளாகும்போது, உறுப்புகளின் நிறமும்
குன்றிவிடும்.
உறுப்புகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற வேண்டுமானால், உறுப்புகள் அடைந்த பிணி போக வேண்டும், பிணி போக வேண்டுமானால்,
நோய்க்குரிய மருந்துண்ண வேண்டும். நோய் எந்த நிறத்தைக் கொண்டதோ அந்த நிறத்து மருந்து அந்த நோயைத் தீர்க்கக் கூடியது.
செயற்கைப் பொருள்களைப் பாதுகாக்க பூசப்படுகின்ற நிறம் வெளுத்துவிட்டால், மீண்டும் நிறம் பூசுவதைப் போல உறுப்புகளைப் பாதுகாக்கும்
நிறம் ஒளியிழந்துவிட்டால், மீண்டும் உறுப்புகள் நிறம்பெறச் செய்ய அதற்குரிய நிற நீரைப் பருக வேண்டும்.நிற நீர் என்பது, நிறம் கலந்த நீரல்ல.
சூரியவொளி இயற்கைப் பொருள்களால் ஆனது. அது போல், உடம்பினது உறுப்புகளும் இயற்கைப் பொருள்களானது என்பதால், இயற்கையான
நிறத்தையேஉறுப்புகளுக்கு ஏற்ற வேண்டும்.பல நிறமுடைய கண்ணாடிக் குப்பிகளில் சுத்தமான தெனி நீரைநிரப்பி, சூரியவொளியில்
வைத்தெடுத்து, அந்த நீரைப் பருகி வந்தால், உடம்பில் குறைந்துபோன நிறம் மீண்டும் ஒளிபெறும். உறுப்புகள் இழந்த நிறத்தை மீண்டும் பெற்று
அழகுடன் விளங்கும்.சூரியவொளி நிறம் ஏழு எனச் சொல்லப்பட்டாலும் அவை ஏழும் இரண்டு நிறங்களுள் அடங்கும். அவை இரண்டும் சிவப்பு,
நீலம் ஆகும். இவ்விரண்டு நிறங்களின் சேர்க்கையால் பல நிறங்கள் தோன்றுகின்றன.
உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆற்றல்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்தால் அவை வெப்பம், தட்பம் என்னும் இரண்டு அடங்கும்.
பருப்பொருளை நுண்ணியதாக்கி விரிவடையச் செய்வது, சூடு. இது வெப்பம். நுண்ணிய பொருளை ஒருங்கு திரட்டுவது, குளிர்ச்சி. இது தட்பம்.
வெட்பமும் தட்பமும் தம்மில் மிகாமலும் குறையாமலும் ஒத்து நிற்குமானால், உலகமாகிய பேருடம்பும் உடலாகிய சிற்றுடம்பும் சிதைந்து
போகாமல் நிலைத்து நிற்கும். அவ்வாறல்லாமல், ஒன்று மிகுந்தும் ஒன்று குறைந்தும் இருக்குமானால், உலகமும் உடம்பும் நிலைகுலந்து
போகும்.
உலகத்துக்கும் உடலுக்கும் வெப்பத்தைத் தருவது, சூரியன். தட்பத்தைத் தருவது, சந்திரன்.சூரியனைப் பூமி சுற்றுவதனாலும் பூமியைச் சந்திரன்
சற்றுவதனால் தட்பமும் வெப்பமும் தம் நிலையிலிருந்து மாறாமல் நிலை நிறுத்தப்படுகின்றன. சூரியனின் ஒலியலையும் சந்திரனின்
ஒலியலையும் உடம்புக்கு வேண்டிய அளவு சூட்டையும் குளிர்ச்சியையும் அளிக்கின்றன.உடம்புக்குத் தேவையான வெப்பத்துக்கும் தட்பத்துக்கும்
நிறத்துக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்க்கலாம்.சிவப்பு நிறம் வெப்பத்தையும் நீல நிறம் குளிர்ச்சியையும் கொண்டவை. தட்பமும்
வெப்பமும் சமமாக இருக்கும் போது, உடம்பில் நீலமும் சிவப்பும் சமமாகவே இருக்கும்.
உடம்பில் சூடு மிகுந்து காணப்பட்டால் சிவப்பு நிறம் மிகுந்திருக்கும். குளிர்ச்சி மிகுந்திருந்தால் நீல நிறம் மிகுந்திருக்கும்.சிவப்பு நிறம்
மிகுதியானால், வெப்பு நோய் (அம்மை நோய்) இளைப்பு, எலும்புருக்கி, நீரிழிவு, சொறிசிரங்கு முதலியன உண்டாகும். பித்தம் பெருகும். உண்ட
உணவு செரிக்காது. மயக்கம், கிறுகிறுப்பு, மஞ்சள்சாமாலை முதலிய நோய்கள் ஏற்படும்.நீல நிறம் மிகுதியானால் கோழை கட்டும். உடம்பு
அளவுக்கு மேல் பருமனாகும். திமிர்ப்பு உண்டாகும். கால், கைகளில் பிடிப்பு ஏற்படும். செரியாமை, நீர்க்கட்டு, சளி, ஈளை, இருமல், இளைப்பு
முதலிய நோய்களைத் தோற்றுவிக்கும்.இங்ஙனம், இந்நிறங்கள் சமநிலை கெடும்போது உடம்பில் பலவகை நோய்களை உருவாக்கும்.
மனித உடம்பு பருவுடம்பு, நுண்ணுடம்பு என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. பருவுடம்பும் அதன் உறுப்புகளும் அவற்றில் பரவியிருக்கும்
நிறங்களையும் முதலாகக் கொண்டே அவற்றினால் உண்டாகும் விளைவுகளும் இருக்கும்.நுண்பொருள்கள் பருப்பொருளின் முதலாகும்.
பருவுடம்பை இயக்குவது நுண்ணுடம்பு. நுண்ணுடம்பை இயக்குவது, உயிர். பருவுடம்பில் நோய் ஏற்பட்டால், அந்நோய் நுண்ணுடம்பையும்
பாதிக்கும். நோய்கள், பருவுடம்பில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும். அதனால் பருவுடம்புக்கே மருத்துவம் காண்பார், பலர்.
பருவுடம்பில் காணக்கூடிய நோய்க்கு முதலாக இருப்பது நுண்ணுடம்பை அடைந்திருக்கும் நோயேயாகும். நுண்ணுடம்பிலுள்ள நோயை நீக்க
எண்ணுவோர் ஒரே சிலரே.
நுண்டம்பின் நோயை நீக்கக் கூடியது நுண்ணிய முறைகளே. நுண்ணுடம்பு உயிரின் இயக்கத்தினால் இயங்குகிறது. உயிரின் வலிமையைக்
கொண்டே நுண்ணுடம்பின் நோயை நீக்க முடியும். ஆகவே, உயிரின் வலிமையை வலுப்படுத்த வேண்டும்.உலகிலுள்ள ஆற்றல்கள் அனைத்தும்
தட்பவெப்பங்களுக்குள் அடங்கும் என்றும் அவற்றின் நிறங்களெல்லாம் சிவப்பு நீலம் ஆகிய இரண்டினுள் அடங்கும் எனக் கண்டோம்.தட்ப
வெப்பங்களினால் உண்டாகக்கூடிய நோய்களைப் போக்குவதற்கான வழி, அவற்றின் நிறங்களை இடைவிடாது அகக்கண்ணால் கண்டு, நினைவில்
பதியச் செய்வதேயாகும்.உயிரல்லாத வெற்று நிறங்களை நினைப்பதனால், அவற்றை நினைக்கும் உயிரும் நுண்ணிய ஆற்றல்
பெறாமலாகிவிடும். எனவே, வெற்று நிறங்களை நினைவில் எண்ணுவதால் எந்தப் பலனும் ஏற்படாது.
பேரறிவும், பேரருளும், பேராற்றலும் உடைய பேருயிரை பேருடம்பு உடையதாகக் கருதிக்கொண்டு, அந்த அருளுடம்பின் வலப்புறத்தில்
செந்நிறமும் இடப்புறத்தில் நீல நிறமும் விளங்குவதைக் கண்டு கொள்ள வேண்டும். அவ்வாறு கண்டு கொண்டதை நினைவில் நிலைகுலையாது
பதியவைத்துக் கொண்டால், கிடைத்தற்குரிய நன்மைகளும் நலன்களும் வந்து சேரும்.வெப்பமான செந்நிறத்தை உடம்பின் வலது புறத்திலும்,
குளிர்ச்சியான நீல நிறத்தை உடம்பின் இடது புறத்திலும் கண்டுநினைவை ஒரு நிலைப்படுத்திவந்தால், இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய
எல்லா இன்பங்களும் பெறுவது எளியதாகிவிடும்.இதனையே மெய்ந்நூல்கள் ஆண் பெண் இணைந்த அம்மையப்பர் வடிவமெனக் கூறுகின்றன.
இத்தகைய சிவப்பு, நீல நிற வழிபாட்டினால், நுண்ணுடம்பிலுள்ள நோய்கள் தீரும்.இதுவரை நிறங்களின் மூலத்தைக் கண்டோம். இனி, பிற
நிறங்களின் பொதுக்குணங்களைக் காண்போம்.மனித உடலில் சிறியதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. அவற்றுள்
முதன்மையானவை ஏழு.
முதலாவது சக்கரம், முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. அதற்கு மூலாதாரம் என்று பெயர். இரண்டாவது சக்கரம், தொப்புளின்
அருகில் உள்ளது. அது சுவாதிட்டானம்.மூன்றாவது சக்கரம், வயிற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அது, மணிப்பூரகம்.
நான்காவது சக்கரம், நெஞ்ப் பகுதியில் உள்ளது. அது அநாகதம்.ஐந்தாவது சக்கரம், தொண்டைக்குழியில் உள்ளது. அதற்கு, விசுத்தி என்று பெயர்.
ஆறாவது சக்கரம், நெற்றிப் பகுதியில் மூக்கின் அடியில் உள்ளது. அது ஆக்ஞை ஆகும். ஏழாவது சக்கரம், தலையின் உச்சியில் உள்ளது. அதுவே
தலைமைச் சக்கரம். அது சகஸ்ராரம் ஆகும்.இந்தச் சக்கரங்கள் ஏழும் சூரிய ஒளியில் அமைந்திருக்கும் (Vibgyor) ஏழு வண்ண நிறங்களும்
முறையே, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ, ஊதா ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஒரு சக்கரம் சரியாக இயங்கவில்லையானால், அந்தச் சக்கரத்தோடு தொடர்புடைய உள்ளுறுப்புகள் பலவீனமாகும். உடம்பில் நோய் உருவாகும்.
எண்ணங்களும் உணர்வுகளும் சக்கரங்களின் கட்டுப்பாட்டினாலேயே இயங்குகின்றன.எந்தச் சக்கரம் எந்தெந்த உறுப்புகளோடு தொடர்பு
கொண்டுள்ளது என்பதை அறிந்து, அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை, குறைபாடுகளை, நோய்களை சரிசெய்யலாம்.
மூலதாரச் சக்கரம் இதற்குரிய நிறம் சிவப்பு. மூலாதாரச் சக்கரம் பலவீனமாக இருந்தால், எதிலும் நாட்டமிருக்காது. உடம்பில் சக்தி அற்ற
நிலையுண்டாகும். செய்யும் தொழிலில் தவறுகள் ஏற்படும். மனத்தடுமாற்றம், பயம், சிற்றின்பக் குறைபாடு, கருப்பைக் கோளாறு,
மக்கட்பேறின்மை போன்றவை காணப்படும்.மூலதாரச் சக்கரத்தை முறையாகச் செயல்படச் செய்தால் மேற்கண்ட குறைபாடுகளைச் சரி
செய்யலாம். இக்குறைபாடுகளைச் சரி செய்வதற்கு சிவப்பு நிறத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்தால், குறைபாடுகள் குறைந்துவிடும்
நாளடைவில் அவை முற்றிலும் தீர்த்துவிடும்.
மூலாதாரச் சக்கத்தில் குறைபாடுகள் ஏதுமில்லாமல் இருந்து சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தால் மனதில் மகிழ்ச்சியும்
உற்சாகமும் ஏற்படும். மன வலிமையுண்டாகும். இன்ப உணர்வுகளைத் துண்டிவிடும் காதலுணர்வு மிகுந்து விடும்.சுவாதிட்டானச்
சக்கரம்இதற்குரிய நிறம் ஆரஞ்சு. சுவாதிட்டானச் சக்கரம் பலவீனமாகவோ குறைபாடு உடையதாகவோ இருந்தால், கற்பனைத் திறனும்
படைப்புத்திறனும் குறையும். சுயநல எண்ணம் அதிகரிக்கும். பிறருடனான உறவுகள் தடைப்படும். நட்பு, காதல், பாசம் போன்ற உணர்வுகள்
பலவீனமாகும். எதையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் இருக்காது.இக்குறைபாடுகளுக்கு சுவாதிட்டானச் சக்கரம் சரியாக
இயங்காததே காரணமாகும். அதன் இயக்கத்தைச் சீர் செய்ய ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆரஞ்சு நிறமும் சிவப்பு நிறத்தின் அடிப்படையயைக் கொண்டுள்ளது என்பதால், மூலாதாரச் சக்கத்திரனால் கிடைக்கக் கூடிய நன்மைகளும்
சுவாதிட்டானச் சக்கரத்தினால் கிடைக்ககூடிய நன்மைகளும், ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும்.சிவப்பும், ஆரஞ்சும்
மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய வண்ணடம் என்பதால் இந்நிறங்களைப் பயன்படுத்துகின்றவர்கள், உற்சாகமாகக் காணப்படுவார்கள்.
மணிப்பூரகம்இதற்குரிய நிறம் மஞ்சள், வயிற்றின் உள்ளே இருக்கும் கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, கணையம், வயிறு, குடல்கள், சிறுநீரகங்கள்
ஆகிய உறுப்புகள் மணிப்பூரகத்தின் ஆளுமையினால் இயங்குகின்றன.இந்த உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இயக்குவது, மஞ்சள்
நிறம்.மணிப்பூரகச் சக்கரம் வலுவாக இருக்கும்போது, நுண்ணிறவு வளரும். நல்லதையும் தீயதையும் பகுத்தறியும் ஆற்றல் வளரும்.
மஞ்சள் என்பது ஞானத்தின் குறியீடு. மணிப்பூரகம் உயர் நிலையை அடையும்போது, அது தங்க மஞ்சள் நிற அதிர்வுகளை ஈர்க்கத்
தொடங்குகிறது. அதனால், நுண்ணறிவும் பகுத்தணரும் ஆற்றலும் உருவாகிறது.
மஞ்சள் வண்ணம், பிறருடனான உறவுகளைச் சீர்செய்யும்; வலுப்படுத்தும். மனம் விட்டுப் பேசத்தூண்டும். கலகலப்பும் உற்சாகமும் இருக்கும்.
படிக்கும் அறைகளில் மஞசள் வண்ணமிருந்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வின்போதும் மஞ்சள் ஆடையை அணிந்து கொண்டால் நல்ல
முறையில் தேர்வு எழுத முடியும்.படிப்பதில் குறைபாடு அடையவர்கள் மஞ்சள் நிறத்தை அதிகம் பயன்படுத்தினால், அந்தக்
குறைபாடுகளிலிருந்து மீளலாம்.மனச்சோர்வும் மன அழுத்தமும் உள்ளவர்கள் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தக்கூடாது. மணிப்பூரகம்
வலுவிழந்திருந்தால், புதியன கற்கும் ஆவல் இருக்காது. மனம் அலைபாயும், மந்தத் தன்மை இருக்கும். புத்திக் கூர்மையும் நினைவாற்றலும்
குறைந்து காணப்படும். இக்குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டுமானால், மஞ்சள் நிறத்தை அணிந்து கொள்ள வேண்டும்.அனாகதம்
இச்சக்கரத்தை இயக்கும் நிறம், பச்சை, அனாகதம், இதயத்துடன் தொடர்புடையது என்பதால், இச்சக்கரம் வலுவிழந்திருந்தால், எபரிடமும் அன்பு,
பாசம் இல்லாத நிலை தோன்றும், எண்ணத்திலும் செயிலும் ஞானம் இராது. தனக்குத்தானே ஓர் அரணை உருவாக்கிக் கொள்ளும் நிலை
உருவாகும்.
நுண்கலைகளில் நாட்ட முடையவர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பச்சை வண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தால், தங்கள்
திறமையைப் பன்மடங்கு வளர்த்துக் கொள்ளலாம்.மேலும், அமைதியும் சாந்தமும் தேவைப்படுகின்ற இடங்களில் பச்சை நிறத்தைப்
பயன்படுத்தலாம்.பச்சை வண்ணம் தீட்டப்பட்ட பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் மனவளர்ச்சியும் உடல்வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ஓய்வு அறைகள், மனசல மருத்துவமனைகளில், காப்பகங்களில் பச்சை வண்ணம் தீட்டலாம்.பச்சை நிறத்தினால், இதயத் துடிப்பு சீராகும்.
பச்சை நிறம் புதன் கிரகத்தின் நிறம் என்பதால், புதன் கிரகத்தின் நிறம் என்பதால், புதன் கிரகத்தின் அதிர்வலைகளும் அதிலிருந்து வெளிவரும்
சக்தி அலைகளும் பச்சை வண்ணத்தின் அதிர்வு அலைகளால் பெறக்கூடும்.
தொடர்ந்து பச்சை நிறத்தைப் பயன்படுத்தி வந்தால் உணவுப் பொருட்களால் ஏற்படுகின்ற ஒவ்வாமைகள் முற்றிலும் மறைந்துவிடுவதுடன்,
ஒவ்வாமைகளால் ஏற்படக்கூடிய ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய்கள் குறைந்து கொண்டே வரும். நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும்.
தொழில் செய்பவர்கள் பச்சை நிறத்தைப் பயன்படுத்தி, வந்தால், அவர்கள் தங்கள் தொழில் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். பச்சை
நிறத்தைப் பயன்படுத்தும்போது, கற்கும் திறன் வளரும்.பச்சை நிறத்தைப் பயன்படுத்துபவர்களிடத்தில் சில தனித்தன்மை இருக்கும். அவர்கள்
குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் அன்பும், பிணைப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
விசுத்தி
இச்சக்கரம் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. பேச்சுத்திறன், கேட்கும் திறன். அறியும் திறன், தொண்டையிலுள்ள தசைகள், குரல்நாண்கள்,
காது நரம்புகள் ஆகியவை விசுத்திச் சக்கரத்தின் ஆளுமையில் உள்ளன.விசுத்திச் சக்கரத்தின் செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டால்,
தொண்டை நோய், டான்சில்ஸ், மூச்சிரைப்பு, படபடப்பு, தூக்கமின்மை, தைராய்டு, நமைச்சல், அலர்ஜி, காமாலை, பால்வினை நோய்கள், தலைவலி,
வழுக்கை, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் உருவாகலாம்.விசுத்திச் சக்கரத்தின் இயங்குத்தன்மையில் ஏற்படுகின்ற
குறைபாடுகளால் உண்டாகக்கூடிய நோய்கள் அனைத்தையும் நீல நிறத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குணப்படுத்தலாம்.
நீல நிறம் குளிச்சியைத் தரும். அதனால், தூக்கத்தைத் தரும் மனமும் உடலும் அமைதி அடையும்.நீண்ட தூரப் பயணங்களின்போது வாகன
ஓட்டிகள் நீல வண்ண ஆடைகளை அணியக்கூடாது. நீல நிறத்தைக் கொண்ட ஆபரணங்களையும் அணியக்கூடாது. நீல நிறம், தூக்கத்தை
வரவழைக்கும் என்பதால், நீல நிறத்தை அணிந்து கொள்ளும் வாகன ஓட்டிகளால், விபத்துக்கள் நேர வாய்ப்புகள் உண்டு.
நீல நிறம் அமைதியைத் தரும் என்பதால், சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய தொழிற்கூடம், விளையாட்டுக் களம், ஓட்டுநர்கள் நீல நிறத்தைப்
பயன்படுத்தக்கூடாது.
நீல நிறத்தின் ஆற்றலை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் குழு. அக்குழுவின் ஆடைகள் நீல நிறத்தில் இருப்பதனால்
அடிக்கடி தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது. சுறுசுறுப்புக்கு சிவப்பு, மஞ்சள், ஆரஞசு நிறங்களே ஏற்றதாகும்.ஆக்ஞை இச்சக்கரம் மிகமிக
உன்னதமான உயர்நிலைச்சக்கரமாகும். இதன் நிறம் இண்டிகோ ஆகும்.ஆக்ஞை சக்கரத்தின் வலிமையினால் தான் மனிதன் ஞான நிலையை
அடைகிறான். ஆற்றல்களை மேலோங்கச் செய்வதில் ஆக்ஞை சக்கரம் முதன்மை பெறுகிறது.ஆக்ஞை சக்கரத்தின் ஆளுமையால் உடலிலும்
மனத்திலும் ஏற்படக்கூடிய மாசுக்கள் அகற்றப்படுகின்றன. மனத்தில் பதியும் தீய எண்ணங்கள் அகற்றப்படுகின்றன.கற்பதைத்திறனையும்
படைப்பாற்றலையும் மேலோங்கச் செய்கிறது. சிந்திக்கும் திறனை வளர்த்து, மனத் தெளிவை உருவாக்குகிறது. எல்லையற்ற அன்பும், தெய்வீகத்
தன்மையையும் ஞானத்தையும் தருகிறது.
ஆக்ஞை சக்கரத்துக்கு மூன்றாவது கண் என்னும் பெயரும் உண்டு. மூன்றாவது கண் திறக்கும்போது, முக்காலமும் அறியும் சக்தி பிறக்கிறது.
எதிர்மறையான விளைவுகளைத் தருகின்ற அனைத்தையும் எரிக்கும் தன்மை கொண்டது.இண்டிகோ நிறத்தை அணிகின்றவர்கள் அழிக்கும்
தன்மையைப் பெறுவார்கள். அதனால், பல வெற்றிகளையும் அடைவார்கள். பழங்காலத்து மன்னர்களில் பலர் இண்டிகோ நிறத்தில் மேலங்கி
அணிந்து கொண்டு போர்க்களம் சென்றதாகவும், வெற்றிகள் பெற்றதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.இண்டிகோ நிறத்தினால், பீனியல் சுரப்பி,
பாரா தைராய்டு, மத்திய நரம்பு மண்டலம், மூளையின் கீழ்ப்பகுதி, கண், காது, மூக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவை நன்கு செயல்படும்.
சகஸ்ராரம்
இதுவே அனைத்து சக்கரங்களுக்கும் தலைமைச் சக்கரமாகும். இச்சக்கரத்தின் நிறம் ஊதா.இண்டிகோ, ஊதா ஆகிய இரண்டு நிறங்களும் தனிச்
சிறப்புகள் கொண்டவை. இவை இரண்டும் ஞானத்தின் நிறமாகக் கருதப்படுகின்றன. மனிதனின் நிலையை உயர்த்தும் நிறமாகக்
கருதப்படுகின்றன.உயிர் உருவாகும்போது, இந்தச் சக்கரத்தின் வழியாகவே உயிர்ல உள்ளே நுழைகிறது. அதே போல், இந்தச் சக்கத்தின் வழியாக
உயிர் வெளியேறினால், அந்த உயிருக்கு, மறுபிறவி கிடையாது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.பிறப்பிலிருந்து இறப்புவரை இச்சக்கரம்
திறந்தே இருக்கும். பிற சக்கரங்களுக்கு ஏற்படுகின்ற தடைகளோ, தேக்கமோ வலிமை குன்றுதலோ இதற்கு ஏற்படாது. ஊதா நிறத்தின்
அதிர்வுகளால் சகஸ்ராரத்தின் வலிமை மேலும் அதிகரிக்கும்.சகஸ்ராரச் சக்கரம் விரிய விரிய ஞான நிலை உருவாகும். ஞானம் என்பது
பிரபஞ்சத்திலிருந்து பெறப்படுவது. அதனைப் பெற்றுத்தரும் சக்கரம் சகஸ்ராரம் ஆகும். சக்கரத்தின் நிறமும் ஞான நிறம் என்று கருதப்படுகிறது.
ஊதா நிறத்தை அணிவதனால் சிறுநீரக நோய்கள், எலும்பு நோய்கள், நரம்பு நோய்கள், ளை நோய்கள், தோல் நோய்கள், புற்று நோய்கள், வயிற்று
நோய்கள் போன்றவை குணமாகும். சதாரணமானவர்களும் ஊதா நிறத்தை அணிவதன் மூலம் படைப்பாற்றல் கொண்டவர்களாக ஆக முடியும்
என்பது நிரூபணமாகி இருக்கிறது.
அட்டவணை
கிழமைகள் சக்கரங்கள் நிறங்கள் காய்கறிகள் கனிகள் ரத்தினங்கள்
செவ்வாய் மூலாதாரம் சிவப்பு பீட்ரூட் சிவப்பு பவழம்
திராட்சை
பிளம்
மாதுளம்
ஸ்ட்ராபெரி
சாஸ்ஸரி
சுவாதி ஆரஞ்சு பப்பாளி ஆரஞ்சு ஆம்பர் கற்கள்
தர்பூசனி மாம்பழம்
ஞாயிறு மணிப்பூரகம் மஞ்சள் மக்காச் எலுமிச்சை புஷ்பகாரம்
சோளம் வாழைப்
மஞ்சள் பழம்
முட்டை அன்னாசிப்
பருப்பு பழம்
வகைகள் பலாப்பழம்
புதன் அநாகதம் பச்சை பீன்ஸ் பச்சை மாலர்சைட்
கொத்தவரை வாழை பச்சை ஜேட்
பச்சை பச்சை
மிளகாய் ஆப்பிள்
மாங்காய் பேரிக்காய்
பட்டாணி நெல்லிக்காய்
கீரைகள்
சௌசௌ
சிறுபயறு
காரமணி
வியாழன் விசுத்தி நீலம் கடல் பிளம்பழம் டர்குவாய்ஸ்
உணவுகள் நீலடோபாஸ்
சனி ஆக்ஞை இண்டிகோ கத்தரிக்காய் நாவல் சபையர்
பிளம்ஸ் முட்டைகோஸ்
சில வகை
கீரைகள்
திராட்சை
கேது சகஸ்ராரம் ஊதா கத்தரிக்காய் திராட்சை அமீதிஸ்ட்
நாவல்
முட்டைகோஸ்
முக்கியமாக, நாடாளுபவர்களும், உயர் பதவிகளில் இருப்பவர்களும் கற்பிக்கும் நிலையிலுள்ளவர்களும் ஊதா நிறத்தை உபயோகித்தால்,
அவர்களின் செயலில் ஞானம் இருக்கும். அன்பு இருக்கும். தெளிவு இருக்கும் புகழ் கிடைக்கும்.
உடம்பிலுள்ள ஏழு சக்கரங்களின் ஆளுமைகளால் பெறக்கூடிய நன்மைகளை மேலும் அதிகரிக்க அது அதற்குரிய நிறங்களைப் பயன்படுத்துவதன்
மூலம் பெறலாம் எனக் கண்டோம்.
குறைகள் இருந்து அக்குறைகளைப் போக்கக்கூடிய நிறங்களை அறிந்து சீர் செய்து கொள்வது போல், எந்தக் குறைபாடும் இல்லாத நிலையில்
எந்த நிறத்தை அணியலாம் என்றால், ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது என்பதாலும், ஒவ்வொரு கிரகமும்
ஒவ்வொரு சக்கரத்துடன் தொடர்பு உடையது என்பதாலும், அந்தந்த கிழமைக்கு உரிய நிறத்தை அந்தந்த நாளில் பயன்படுத்திக்கொண்டு வந்தால்,
அனைத்து விதமான நன்மைகளும் அடையப் பெறலாம் என்பது துணிவு.
ஞாயிறு & ஆரஞ்சு; திங்கள் & வெண்மை; செவ்வாய் & ரத்த சிவப்பு; புதன் & பச்சை; வியாழன் & மஞ்சள்/சந்தனம்; வெற்றி & சாம்பல்; சனி &
கருநீலம்.
ஆடை அணிவதைப் போலவே, உணவில் சேர்க்கப்படுகின்ற காய்கனிகளையும் அந்தந்த கிழமைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பயன்பெறலாம்.
நிறங்களுக்கு மாற்றாக, உயர்வகைக் கற்களை அணியலாம் எந்தவகையில் இருந்தாலும் நிறங்கள் அது அதற்குரிய கதிரலைகளைவீசிக்கொண்டிருக்கும். அவற்றினால், உடல் சக்கரங்கள் வீறுகொள்வதுடன், உடம்பில் உண்டாகிய குறைபாடுகள் களையப்படும்.உடல் ஆரோக்கியத்தில் நிறங்களின் பங்களிப்பு எத்தகையது என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். இயற்கையில் பொதிந்துள்ள இத்தகையரகசியங்களை எல்லாம் பழங்கால மனிதன் நன்கு அறிந்து வைத்திருந்தான். அதனால்தான் அவனால் உடல்நலத்தோடு நெடுங்காலம் வாழமுடிந்தது

தலையாய குணங்கள் - osho


முதல்படி :
உனது சக்தியை எடுத்துகொள்வது எது. உனது விசேஷ குணாதிசயம் எது என கண்டுபிடிப்பது மிக எளிது – சில தினங்களுக்கு உனது மனதை கவனித்துக் கொண்டிரு- ஒரு டைரி எடுத்து விஷயங்களை குறித்து வைக்கலாம் – உனது சக்தியை, அதிகபட்சமாக எடுத்துக் கொள்வது எது ? உனது கற்பனையை செலுத்துவது எது ?
பொறாமை ? அதிகாரத்திற்கான ஆவல் ? ஆணவம் ? இவைதான் உனது முதல் எதிரி.
ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான விஷயங்களை கண்டுபிடிப்பர் – கோபம், பாலுணர்வை அடக்கி வைத்தல் – இதுபோல. அது என்ன என்று கண்டுபிடித்தலே பாதி வெற்றியடைந்தது போலத் தான். ஏனெனில் நீ மட்டும்தான் கண்டுபிடிக்கமுடியும்.
குருட்ஜிப் தனது சீடர்கள் இதை கண்டுபிடிக்க பலவேறு விதமான வழிகள் வைத்திருந்தார். ஒரு மன நல மருத்துவர்
உன்னுடைய கனவுகள் மூலமாக இதை கண்டுபிடித்துவிடுவார். ஆனால் அவர் எந்த
பள்ளியில் இருந்து கற்றுக்கொண்டு வந்தாரோ அந்த வழிமுறை மூலமாக அதை பொருள்
கொண்டுவிடுவார்.
இரண்டாவதுபடி:
எதிர்வினை புரியாதே. அதைப் பற்றிய விழிப்புணர்வு கொள். அந்த எதிரி வரும்போது எதிர்வினை புரியாதே. அமைதியாக இருந்து அது திரையில் கடந்து செல்வதை கவனிப்பதுபோல கவனி. நீ அதனுடன் பிணைப்பு கொள்ளாவிடில்
திடீரென உனது எதிரி எடுத்துக் கொண்டிருந்த ஒரு அளவற்ற சக்தி விடுதலை பெறும். நீ
புத்துணர்வடைவாய். உநது முழு இருப்பும் திடீரென புதுமையாக இளமையாக மாறும்.
மூன்றாவதுபடி:
மற்றவைகளையும் கண்டுபிடி. பின் இரண்டாவது மூன்றாவது எதிரிகளை கண்டுபிடி. உனக்கு உன்னிடம் உனது சக்தியை எடுத்துக் கொள்ளும் எதிரிகளே இல்லாத போது உன்னிடம் ஒரு அழகு, சாந்தம், அளவற்ற சக்தி ஆயிரம் தாமரை
மலர்களாக உன்னிடம் மலரும்.
Source: THE TRANSMISSION OF THE LAMP

பொழுது போக்கு....


பொழுது போக்கு என்பது எப்படியோ உன்னை இழுத்து வைத்துக் கொண்டிருக்க ஒரு வழி தான்.
எல்லாப் பொழுது போக்குகளும் உன்னிடமிருந்தே நீ தப்பித்துக் கொள்ள செய்யும் முயற்சிகள்தான்.
எனக்கு என்னிடமே ஆனந்தம் பெற முடிகிறது.
தனியே இருப்பதும் சும்மா இருப்பதும் பெரிய ஆனந்தம்.
ஒரு முறை அதை அனுபவித்து விட்டால் பொழுது போக்கு என்ற முட்டாள்தனம் தேவையில்லை.
பொழுதுபோக்கு என்பது வேலைக்கு வேறு பெயர்தானே.
உண்மையான வேலையென்று ஏதும் இல்லாத போது,
இப்படிப் போலி வேளைகளில் பொழுதைப் போக்குகிறாய்.
ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பாய்.
சம்பளம் இல்லை என்ற காரணத்தால் சீட்டாட்டமும் செஸ் விளையாட்டும் வேலை இல்லை என்றாகி விடுமா?
பொழுது போக்குகளை விட்டு சந்தர்ப்பங்களைத்தேடிப் பார்
.செய்வதற்கு ஏதும் இல்லாத போது
உன்னோடே இருந்து பார்
.அதை விட்டு வெளியே வராமல் இருந்து பார்.
--- ஓஷோ ---

இதயத்துடனான இணைப்பை இழந்து விடாதே. OSHO


தியான யுக்தி – 1

உணர்வுதான் உண்மையான வாழ்க்கை. நினைப்பு போலியானது. ஏனெனில் நினைப்பு என்பது அதைப் பற்றியது. அது உண்மையானதல்ல. மதுவைப் பற்றிய நினைப்பு உனக்கு போதையை கொடுக்காது. மதுதான் உனக்கு போதையை கொடுப்பது. நீ மதுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்கலாம், ஆனால் மது பற்றிய நினைப்பு மட்டுமே உனக்கு போதை தராது. நீ அதை குடிக்க வேண்டும். குடிப்பது உணர்வின் மூலமே நிகழும்.
நினைப்பு ஒரு போலியான செயல், ஒரு பதிலான செயல். அது உனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பது போன்ற உணர்ச்சியை தரும். ஆனால் எதுவும் நிகழ்வதில்லை. அதனால் நினைப்பிலிருந்து உணர்வுக்கு நிலைமாறு. அதற்கு சிறந்த வழி இதயத்திலிருந்து சுவாசிக்க ஆரம்பிப்பதுதான்.
பகலில், எவ்வளவு முறை நினைவு வருகிறதோ அவ்வளவு முறை ஒரு ஆழமான மூச்சு எடு. அது உனது இதயத்தின் மையத்தை சென்று அடைவதாக உணரு. முழு இயற்கையும் உன் இதயமையம் எதுவோ அங்கே உன்னுள் சொரிவதாக உணர்ந்து பார். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அது சாதாரணமாக வலது பக்கத்தில் இருக்கும். அதற்கும் உடல்ரீதியான இதயத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது முற்றிலும் வித்தியாசமான விஷயம். அது நுண் உடலை சேர்ந்தது.
ஆழமாக மூச்செடு. நீ என்ன செய்தாலும் ஆழமான மூச்செடுத்து ஐந்து தடவைகள் செய். மூச்சை இழுத்து இதயத்தை நிரப்பு. இயற்கை இதயத்தின் மூலமாக நிரம்புவதாக இதயத்தின் நடுவே உணர்ந்து பார். வாழ்வு, தெய்வீகம், இயற்கை, துடிப்பு எல்லாமும் சொரிவதாக உணர். பின் அழுத்தமாக மூச்சை வெளியே விடு. இதயத்திலிருந்து உனக்கு கிடைத்த எல்லாவற்றையும் திரும்ப இயற்கைக்கு, தெய்வீகத்திற்கு கொடுப்பதாக உணர்ந்து கொடு.
ஒரு நாளைக்கு இதை பல தடவைகள் செய். ஆனால் எப்போது இதை செய்தாலும் முதலில் ஐந்து தடவைகள் ஆழமான மூச்செடு. அது தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாற உனக்கு உதவி புரியும்.
நீ மேலும் மேலும் உண்ர்வுள்ளவனாக மாறுவாய். நீ விழிப்படையாத பல விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ அதிக சுவை அறிபவனாக, அதிக வாசனை உணர்வுள்ளவனாக, தொடு உணர்ச்சி அதிகம் உள்ளவனாக மாறுவாய். உன்னால் அதிகம் கேட்க முடியும், அதிகமாக பார்க்க முடியும். எல்லாமும் அதிக ஆழமானதாக மாறும். தலையிலிருந்து இதயத்துக்கு இடம் மாறு, திடீரென உனது புலன்கள் ஜொலிப்பதை நீ உணர்வாய். வாழ்வு உன்னுள் துடிப்பதை, உன் மூலம் பாய்ந்தோட தயாராக இருப்பதை, உன் மூலம் பொங்கி வருவதை நீ உணர்வாய்.
தியான யுக்தி – 2
உணர்வோடு சுவையறிதல்
நாம் சுயஉணர்வின்றி, இயந்திரதனமாக, அவசரமாக சாப்பிடுகிறோம். சுவையை அறியாமல் ருசித்து உணராமல் சாப்பிடும்போது நாம் உணவை அடைக்கிறோம், அவ்வளவுதான். மிகவும் மெதுவாக சாப்பிடு, சுவையை ருசி. பொருட்களை விழுங்காதே. அவசரமின்றி ருசித்து சுவையாகவே மாறி விடு. இனிப்பை உணரும்போது இனிப்பாகவே மாறு. அப்போது அதை உனது உடல் முழுவதும் உணர முடியும். வாயில் மட்டுமின்றி. நாக்கில் மட்டுமின்றி அலை போல உடல் முழுவதும் பரவுவதை உணர முடியும்.
நீ எதை சாப்பிட்டாலும் அந்த சுவையை உணரு, அந்த சுவையாகவே மாறு. சுவையறியாவிட்டால் உனது புலன்கள் இறந்தவையாகி விடும். அவை மேலும் மேலும் உணர்விழந்துவிடும். உணர்விழந்து இருக்கும்போது உனது உடலை உன்னால் உணர முடியாது. உனது உணர்ச்சிகளை உன்னால் உணர முடியாது. அப்போது நீ உனது தலையில் மட்டும்தான் இருப்பாய்.
தண்ணீர் குடிக்கும்போது அதன் குளிர்ச்சியை உணரு. கண்களை மூடி, மெதுவாக உணர்ந்து குடி. குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்து அந்த குளிர்ச்சியாகவே நீ மாறு. ஏனெனில் தண்ணீரில் இருந்த அந்த குளிர்ச்சி இப்போது உனது உடலுக்கு மாற்றப்பட்டு விட்டது. அது உனது உடலின் பாகமாகி விட்டது. தண்ணீரில் இருந்த குளிர்ச்சி இப்போது உன் வாயில், உனது நாக்கில் உள்ளது. அது உனது உடல் முழுவதும் நிகழ அனுமதி. அதன் குணம் உடல் பூராவும் பரவ அனுமதித்தால் உனது உடலில் குளிர்ச்சியை நீ உணரலாம். இந்த முறையில் உனது புலனுணர்வு வளரும், நீ மேலும் மேலும் உயிர்துடிப்போடும், நிறைவாகவும் மாறுவாய்.
தியான யுக்தி 3
மனதை உபயோகிக்காமல் பார்த்தல்
நீ பொருட்களை எப்படி பார்க்கிறாய் என்பது உன்னைப் பொருத்தது, பொருட்களை பொருத்ததல்ல. இடைச்செருகல் செய்யும் மனதை விட்டு விட்டு நேரடியாக தனித்து பொருட்களை பார்க்கும் ஒரு நிலைக்கு வரும் வரை மனம் உன்னை மொழிபெயர்த்துக் கொண்டேதான் இருக்கும். அது நிறத்தை மாற்றும், அது பல விஷயங்களை கலந்து இடையூறு செய்யும். அவை தூய்மையானதாக இராது.
அதனால் உண்மையை அடைய ஒரே வழிதான் உள்ளது. – எப்படி நீ உனது பார்வையாக மாறுவது, மனதின் துணையை எப்படி கைவிடுவது என கற்றுக் கொள்வதுதான். இந்த மனதின் கொந்தளிப்புதான் பிரச்னை. ஏனெனில் மனத்தினால் கனவுகளை மட்டும்தான் உருவாக்க முடியும். ஆனால் மனதால் மிக அழகான கனவுகளை உருவாக்க முடியும். அதனால் நீ மிகவும் கிளர்ச்சியுறுகிறாய். இந்த கிளர்ச்சியினால் அந்த கனவு உண்மை போல தோன்றுகிறது. நீ மிகவும் அதீத கிளர்ச்சியுறும்போது போதையடைந்து விடுகிறாய். நீ உணர்வோடு இல்லை. அப்போது நீ பார்ப்பது எதுவும் நீ பார்ப்பதல்ல. மேலும் எத்தனை மனம் உண்டோ அத்தனை உலகம் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு மனமும் அதன் சொந்த உலகில் வாழ்கிறது. நீ அடுத்தவரின் முட்டாள்தனத்தை எண்ணி சிரிக்கலாம், ஆனால் நீ உன்னுடைய முட்டாள்தனத்தை பார்த்தே சிரிக்காத வரை நீ இயல்பானவனாகவோ, உண்மையானவனாகவோ, தாவோவின் வழி செல்பவனாகவோ ஆக முடியாது. என்ன செய்வது ?
மனதை கொண்டு வராமல் இருந்து பார்க்க முதலில் சிறிய விஷயங்களில் முயற்சி செய். ஒரு மலரை பார்க்கும் போது வெறுமனே பார். அழகு என்றோ அசிங்கம் என்றோ சொல்லாதே. வார்த்தைகளை கொண்டு வராதே. சொற்படுத்தாதே. வெறுமனே பார். மனம் மிகவும் சங்கடப்படும், அசௌகரியப்படும். ஏதாவது சொல்ல முற்படும். ‘அமைதியாக இரு, நான் பார்க்கிறேன், என்னை பார்க்க விடு’ என்று சொல்லி விடு.
முதலில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் உனக்கு அதிக ஈடுபாடு இல்லாத விஷயங்களில் இருந்து இதை ஆரம்பி. வார்த்தைகள் எதையும் உள்ளே கொண்டு வராமல் உனது மனைவியை பார்ப்பது கடினம். நீ உணர்வுரீதியாக இணைந்திருக்கிறாய், ஈடுபாடு கொண்டிருக்கிறாய். அன்போ, கோபமோ ஆனால் ஈடுபட்டிருக்கிறாய். நடுநிலையான விஷயங்களில் இருந்து ஆரம்பி, பின்தான் உணர்வுரீதியாக கட்டுண்டுள்ள சூழ்நிலைகளை கையாள முடியும்.
எப்போது என்னால் விஷயங்களை மனமின்றி பார்க்கமுடியும் என்று உனக்கு தோன்றுகிறதோ அதன்பின் சொந்த பிடிப்புக்கள் மீது முயற்ச்சித்துப் பார். மெது மெதுவாக அதில் திறமை வந்துவிடும். நீ மனதோடு அதிக நாட்கள் இருந்துள்ளதால் மனமின்றி ஒரு கணம் கூட இருக்க முடியாது என்றே உனக்குத் தோன்றும். மனமின்றி இருக்க முடியும் என்பதை உன்னால் நம்ப முடியாது. ஆனால் முயற்சித்துப் பார். எந்த அளவு மனதை தள்ளி வைக்கிறாயோ அந்த அளவு வெளிச்சம் உனக்குத் தெரியும். ஏனெனில் அப்போது அங்கே கனவுகள் இல்லை, எனவே கதவு திறந்திருக்கிறது, ஜன்னல் திறந்திருக்கிறது, ஆகாயம் உனக்கு தெரிகிறது, சூரியன் எழுகிறது, அது வந்து உன் இதயத்தை தொடுகிறது, ஒளி உன்னை வந்தடைகிறது. உனக்குள் கனவுகள் குறைய குறைய நீ சத்யத்தால் மேலும் மேலும் நிரப்பப்படுவாய்.

தனிமை பற்றி ஓஷோ


கேள்வி :
நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவேதான் பிறக்கிறோம்தனியாகவேதான் வாழ்கிறோம்,தனியாகவேதான் இறக்கிறோம் என்று கூறினீர்கள். இருப்பினும் நாம்
பிறந்ததிலிருந்து நாம் என்ன செய்தாலும்
யாராக இருந்தாலும் நாம் அடுத்தவருடன்
தொடர்பு கொள்ளுதலையே தேடுகிறோம். மேலும் குறிப்பிட்ட
 ஒருவருடன் அன்யோன்யமாக இருப்பதற்குநெருக்கமாக இருத்தலையே விரும்புகிறோம்அதில் ஈடுபாடு கொள்கிறோம். நீங்கள் இதைப்பற்றி ஏதாவது கருத்து சொல்ல முடியுமா?
தியான் அமியோ,
நீ கேட்டிருக்கும் இந்த கேள்வி
ஒவ்வொரு மனிதனுக்கும் வருகிறது. நாம் ஒருவனாகத்தான் பிறக்கிறோம், ஒருவனாகத்தான் வாழ்கிறோம், ஒருவனாகத்தான் இறக்கிறோம்.
ஏகாந்தம்தான் நமது உண்மைநிலை. ஆனால் நமக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு
இல்லை. நமக்கு அதைப்பற்றிய உணர்வு இல்லாத்தால் நாமே நமக்கு
அன்னியர்களாக தெரிகிறோம். நமது ஒருமையை ஒரு அற்புதமான வரமாக, அழகாக, மௌனமானதாக, அமைதியானதாக, பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதாக எடுத்துக் கொள்ளாமல் நாம் அதை தனிமையைக தவறாக புரிந்துகொள்கிறோம்.
ஒருமை
தனிமை என தவறாக புரிந்து கொள்ளப் படுகிறது. நீ ஒருமுறை உனது ஒருமையை
தனிமை என தவறாக புரிந்துகொண்டுவிட்டால் முழு பொருளும் மாறிவிடும். ஒருமை
அழகானது, நேர்மறையானது, சிறப்பானது. தனிமை வறுமையானது, எதிர்மறையானது, இருண்டது, இருட்டானது.
தனிமையிலிருந்து எல்லோரும் தப்பித்து ஓடுகின்றனர்.
அது காயம் போன்றது, அது வலி தருவது. அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி கூட்டத்தினிடையேஇருப்பது சமுதாயத்தின் பாகமாகி விடுவது, மனைவி அல்லது கணவனை தேடிக் கொள்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது
ஆகியன. இந்த கூட்டத்தில் நீ உனது தனிமையை மறந்து விட முடியும்.
ஆனால் அதை மறப்பதில் இதுவரை யாரும் வெற்றியடைய வில்லை. அது உனது
இயல்பு, நீ அதை புறக்கணிக்கலாம் – ஆனால் நீ அதை அதாகவே
பார்க்காததால் அந்த பிரச்னை மேலும் சிக்கலானதாகிறது. நீ ஒருமையாக
பிறந்திருக்கிறாய் என்பதை நீ சலுகையாக எடுத்துக் கொண்டு மறந்துவிட்டாய்.
அகராதி அடிப்படையில் அவற்றிற்க்கு ஒரே அர்த்தம்தான்.
இது அந்த அகராதியை உருவாக்கிய மனிதர்களின் மனங்களை காட்டுகிறது.
அவர்கள் தனிமைக்கும் ஒருமைக்கும் இருக்கும் அளவற்ற வித்தியாசத்தை
புரிந்துகொள்ளவில்லை. தனிமை ஒரு பிளவு. ஏதோ ஒன்று விடுபட்டுவிட்டது. அதை நிரப்ப ஏதோஒன்று தேவைப்படுகிறது. அதை எதனாலும் நிரப்பமுடியாது. ஏனெனில்
முதலாவதாக அது ஒரு தவறான புரிதல். நீ வயதில் வளர வளர அந்த பிளவும் பெரிதாகிறது. மக்கள் தங்களுடன் இருப்பதற்கு பயந்து கொண்டு மிகவும் முட்டாள்தனமான செயல்களைசெய்கின்றனர். சீட்டுக்கட்டு தனியாக விளையாடுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். மற்றவர்
அங்கே இருக்க மாட்டார். ஒரே ஆள் இரண்டு பக்கத்திலிருந்தும் ஆடக்கூடிய
விளையாட்டை அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
எப்படியோ எதிலோ ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த ஈடுபடுதல் வேலையில் அல்லது
மனிதர்களில் இருக்கலாம். வேலையில் ஈடுபடுவர்கள்
வேலைபிசாசுகள். அவர்கள் வார இறுதி நாள் நெருங்க நெருங்க பயபடுவார்கள் – என்ன செய்யப் போகிறேமோ என்று. அவர்கள் எதுவும் செய்ய வில்லை, செய்ய முடிய வில்லை என்றால் அவர்களை அவர்களிடமே விட்டு விட்டால், அதுதான் மிகவும் வேதனையான அனுபவம் அவர்களுக்கு.
இந்த உலகில் வார இறுதி நாட்களில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன என்பதை
அறிந்தால் நீ ஆச்சரியப்படுவாய். மக்கள் தங்களது கார்களில் ஏறி
ரிசார்ட்டுகளுக்கோ, மலைபிரதேசங்களுக்கோ, கடற்கரைக்கோ காரின் பின் முனையும்
அடுத்த காரின் முன்முனையும் ஒட்டிக் கொண்டிருக்கும்படி
போகிறார்கள். போய் சேர எட்டு மணி நேரமோ, பத்து மணி நேரமோ ஆகலாம், அங்கேயும் அவர்களுக்கு செய்ய எதுவோ கிடைத்து விட்டது. ஆனால் இப்போது அவர்களது வீடும், அவர்களது இடமும் இந்த கடற்கரை ரிசார்ட்டை விட அதிக அமைதியாக இருக்கும். எல்லோரும் இங்கு வந்துவிட்டனர். ஆனால் ஏதோ ஈடுபாடு……..
மக்கள் சீட்டுக்கட்டு, செஸ் விளையாடுகின்றனர்.
மணிக்கணக்காக டிவி பார்க்கின்றனர். ஒரு அமெரிக்கன் சராசரியாக 5 மணி நேரம் டிவி பார்க்கிறான். மக்கள் ரேடியோ கேட்கின்றனர். தங்களை தவிர்த்துக்கொள்வதற்காக மட்டுமே. அவர்களது எல்லா செயல்பாட்டிற்க்கும் காரணம் ஒன்றே. – தனிமையில் இருக்கக் கூடாது. அதுமிகவும் அச்சமூட்டுவது. இந்த கருத்து மற்றவர்களிடம் இருந்து
பெறப்பட்டது. ஒருமையில் இருப்பது அச்சமூட்டும் நிலை என்று உனக்கு யார் சொன்னது
ஒருமையை பற்றி தெரிந்த, அறிந்த யாராவது அதைப்பற்றி
சொன்னால் அது முற்றிலும் வேறானது. ஒருமையாய் இருப்பதை விட அழகானது, அருமையானது, சந்தோஷமானது, அமைதியானது எதுவுமே இல்லை என்றே சொல்வார்கள். ஆனால் நீ கூட்டம் சொல்வதை கேட்கிறாய். தவறாக புரிந்து கொண்டிருக்கும் மக்களே பெரும்பான்மையானவர்கள்.
அப்படி இருக்கும் போது யார் ஜராதுஸ்த்ராவைப் பற்றியோ, கௌதம புத்தரைப் பற்றியோ கவலைப்படுவார்கள் இந்த தனித்துவமான அரியவர் தவறாக இருக்கக் கூடும், அவர்கள் கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கலாம், தங்களையும் ஏமாற்றிக் கொண்டு மற்றவர்களையும்ஏமாற்றக் கூடும். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் தவறாக இருக்க முடியாது அல்லவா மேலும் கோடிக்கணக்கான மக்கள், தனிமையில் விடப்படுவது வாழ்வில் மிக மோசமான அனுபவம், அது நரகம் என்று ஒத்துக்
கொள்கிறார்கள்.
ஆனால் தனிமையில் விடப்படுவது நரகம் என்ற காரணத்தாலோ, தனிமையை பற்றிய பயத்தினாலோ உருவாக்கப்படும் எந்த உறவும் நிறைவை தராது. அதன் அடிப்படை வேரே விஷம். நீ உனது துணைவியை நேசிக்க முடியாது, நீ தனிமையில் இருக்க முடியாது
என்று அவளை உபயோகிக்கிறாய். அவளும் அதே போலத்தான், அவளாலும் உன்னை நேசிக்க முடியாது. அவளும் தனிமையை தவிர்க்கத்தான் உன்னை உபயோகிக்கிறாள்.
இயல்பாகவே அன்பு என்ற பெயரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – அன்பைத் தவிர. சண்டைகள் வரலாம், வாக்குவாதங்கள் வரலாம், இருப்பினும் அவர்கள் தனிமையாய் இருப்பதை தேர்ந்தெடுப்பதில்லை. யாராவது ஒருவர் அங்கே இருக்கிறார், நீ ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். நீ உனது தனிமையை மறந்து விடலாம். ஆனால் அன்பு அங்கே சாத்தியமில்லை. ஏனெனில்அன்பிற்க்கான அடிப்படையே அங்கில்லை. அன்பு பயத்தின் மூலம் வராது, வளராது
நீ கேட்கிறாய், நீங்கள் அன்றொரு நாள் நாம் தனியாகவே பிறக்கிறோம், தனியாகவே வாழ்கிறோம், தனியாகவே இறக்கிறோம் என்று கூறினீர்கள்.
ஆனாலும் நாம் பிறந்த அன்றிலிருந்து நாம் என்ன செய்தாலும், நாம் யாராகயிருந்தாலும் நாம்தொடர்பு கொள்ள மற்றவரை தேடுகிறோம் என்பது போல தோன்றுகிறது.
இப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள மற்றவரை தேடுவது தப்பிப்பதைத் தவிர
வேறெதுவும் அல்ல. ஒரு சிறு குழந்தை கூட செய்ய எதையாவது கண்டு
பிடிக்கிறது. எதுவும் கிடைக்காவிடில் தனது கால் கட்டை விரலை தனது வாய்க்குள்
வைத்து சூப்ப ஆரம்பிக்கிறது. அது முற்றிலும் பொய்மையான ஒரு செயல், அதிலிருந்து எதுவும் கிடைக்க போவதில்லை, ஆனால் ஏதோ ஒன்றில் ஈடுபட்டிருக்கிறாய். அவன் எதையோ செய்து கொண்டிருக்கிறான். ரயில் நிலையங்களில், விமான நிலையத்தில் சிறிய குழந்தைகள் தங்களது கரடி பொம்மையை தூக்கி கொண்டிருப்பதை நீ பார்க்கலாம். அவர்களால் அது இல்லாமல் தூங்க முடியாது. இருட்டு அவர்களது தனிமையை மேலும் அபாயகரமானதாக்குகிறது. கரடிபொம்மை ஒரு சிறந்த பாதுகாப்பு. யாரோ அவர்களுடன் இருக்கிறார்.
மேலும் உங்களது கடவுள் என்பவர் வளர்ந்தவர்களுக்கான கரடி பொம்மை மட்டுமே.
நீ எப்படியோ அப்படியே உன்னால் வாழ முடியாது. உனது உறவுகள் உண்மையான
உறவுகளல்ல. அவை அவலஷ்சணமானவை. நீ அடுத்தவரை உபயோகிக்கிறாய், மேலும் உனக்கு மிக நன்றாக தெரியும். அடுத்தவரும் உன்னை உபயோகிப்பது. மேலும் மற்றவரை உபயோகிப்பதுஅவரை ஒரு பொருளாக, ஒரு சந்தைசாமானாக குறைத்து
மதிப்பிடுவதாகும். அந்த நபரிடம் உனக்கு எந்த மரியாதையும் கிடையாது.
நீ மேலும் நாம் சாதாரணமாக குறிப்பிட்ட ஒரு நபரிடம் அன்யோன்யப்படுகிறோம்.
என்றும் கேட்கிறாய்.
இதற்கு உடல்ரீதியான காரணம் இருக்கிறது.
நீ ஒரு தாயால், ஒரு தந்தையால் வளர்க்கப்படுகிறாய், நீ ஒரு பையன் எனில் நீ உனது தாயைநேசிக்க ஆரம்பித்துவிடுகிறாய். உனது தந்தையை ஒரு போட்டியாளனாக பார்த்து அவரிடம்பொறாமை கொள்கிறாய். நீ ஒரு பெண்ணாக இருந்தால் உனது தந்தையை நேசிக்க ஆரம்பிக்கிறாய்.உனது தாயை வெறுக்க ஆரம்பிக்கிறாய். ஏனெனில் அவள் உனது போட்டியாளராக இருக்கிறாள்.இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். மேம்போக்காக கூறப்படுபவை அல்ல. இதனுடையவிளைவாக உனது முழு வாழ்க்கையும் ஒரு துயரமாக மாறி விடுகிறது.
பையன் தனது தாயின் உருவத்தை பெண்ணின் உதாரணமாக கொள்கிறான். அவன்
தொடர்ந்து கட்டுதிட்டப்படுத்தப்படுகிறான். அவனுக்கு மிகவும்
நெருக்கமாக, மிகவும் அன்யோன்யமாக ஒரே ஒரு பெண்ணைத்தான் தெரியும்.
அவளது முகம், அவளது தலைமுடி, அவளது அருகாமை எல்லாமும் பதிவாகி விடுகிறது.
விஞ்ஞானரீதியாக இதற்கு உபயோகிக்கப்படும் வார்த்தை மிகச்சரியாக இதுதான். அது அவனதுமனதில் அச்சாக பதிந்துவிடுகிறது. இதேதான் ஒரு பெண்ணிற்க்கு தனது தந்தையிடம் நடக்கிறது. நீ வளர்ந்தவுடன் யாரோ ஒரு பெண்ணிடமோ, ஆணிடமோ காதல் வயப்படும்போது, நீ நாம் ஒருவருக்கொருவர்
உண்டானவர்கள் என்று நினைத்துக் கொள்கிறாய். யாரும்
யாருக்காகவும் உண்டாக்கப்படவில்லை. ஆனால் உனக்கு ஏன் குறிப்பிட்ட ஒருவர் மேல் ஈர்ப்புவருகிறது. ஏனெனில் அதற்கு காரணம் உனது பதிவுதான். அவன் உனது தந்தையை ஏதோ ஒருவகையில் பிரபலித்திருக்க வேண்டும். அவள் ஏதோ ஒரு வகையில் உனது தாயை பிரதிபலித்திருக்க வேண்டும்.
எந்த பெண்ணும் அப்படியே உனது தாயை நகலெடுத்தாற்போல இருக்க முடியாது.
மேலும் நீயும் ஒரு தாயை தோடவில்லை. ஒரு துணைவியைத்தான்
தேடுகிறாய். ஆனால் உன்னுள் பதிவாகி உள்ள அச்சு உனக்கு தகுந்த பெண் யாரென்று
முடிவு செய்கிறது. நீ அது போன்ற பெண்ணை பார்த்த கணமே அங்கே காரண காரியத்திற்க்கேஇடமில்லை. நீ உடனடியாக ஈர்க்கப் படுகிறாய். உனது அச்சுப்பதிவு உடனே வேலை செய்யதுவங்கி விடுகிறது – இவள்தான் உன் துணைவி, அல்லது இவன்தான் உன் துணைவன்.
கடற்கரையில், சினிமா தியேட்டரில், பார்க்கில் அவ்வப்போது சந்திப்பது
என்பது மிகவும் நல்லது. ஏனெனில் மற்றவரை பற்றி உனக்கு
முழுமையாக தெரியப் போவது இல்லை. ஆனால் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ
விரும்புகிறீர்கள். திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறீர்கள், காதலிப்பவர்கள் எடுக்கக் கூடியமிக அபாயமான முடிவுகளில் ஒன்று இது.
திருமணம் முடிந்த கணமே மற்றவரைப் பற்றி
முழுமையாக உனக்கு தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது ஒவ்வொரு சிறு விஷயமும் உனக்குஅதிர்ச்சியூட்டுகிறது – ஏதோ தவறு நடந்துவிட்டது. இதுவல்ல அந்த பெண், இதுவல்ல அந்த ஆண் – ஏனெனில் நீ உனக்குள் சுமந்து
கொண்டு இருக்கும் வடிவத்திற்க்கு அவர்கள் பொருந்தி வரவில்லை.
பிரச்னை இன்னும் பெரிதாகும். ஏனெனில் அவள் தனது தந்தையின்
வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாள், நீ அதற்கு பொருந்த வில்லை. நீ உனது தாயின் வடிவத்தைசுமந்து கொண்டிருக்கிறாய். அவள் அதற்கு பொருந்தவில்லை. நீ உனது தாயின் வடிவத்தை சுமந்து கொண்டிருக்கிறாய், அவள் அதற்கு பொருந்தவில்லை. இதனால்தான் அனைத்து திருமணங்களும் தோல்வியடைகின்றன.
மிக அரிதான திருமணங்கள்தான் தோல்வியடைவதில்லை. தோல்வியடையாத
திருமணத்திலிருந்து கடவுள் உன்னை காப்பாற்றுவார் என நான்
நம்புகிறேன். சிலர் குரூரமானவர்கள். மற்றவர்களை இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார்கள்.சிலர் தங்களை தாங்களே இம்சை படுத்திக் கொள்வதில் சந்தோஷமடைவார்கள். ஒரு கணவனும்மனைவியும் இந்த இரண்டு வகைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையை சேர்ந்தவராக
இருந்தால், அந்த திருமணம் ஒரு வெற்றி பெற்ற திருமணமாக இருக்கும். ஒருவர் இம்சை
படுத்துவார், ஒருவர் இம்சை படுவார். – இது ஒரு பொருத்தமான திருமணம், ஏனெனில் ஒருவர் இம்சை படுத்துவதில் சந்தோஷப்படுவார், ஒருவர் இம்சை படுவதில் சந்தோஷம் கொள்வார்.
ஆனால் முதலில் நீ இம்சை படுத்துபவனா, இம்சை படுபவனா என கண்டுபிடிப்பது
மிகவும் கஷ்டம். பின் உனது அடுத்த துருவ வகையை சேர்ந்தவரை
கண்டு பிடிப்பது. மேலும் நீ புத்திசாலியாக இருந்தால் நீ ஒரு மனோதத்துவ நிபுணரிடம்
சென்று நீ குரூரமானவனா, குரூரத்தை அனுபவிப்பவனா என கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.உனக்கு பொருந்தக் கூடிய சில அறிகுறிகளை அவர் உனக்கு கொடுக்கக் கூடும்.
சில நேரங்களில் குரூரமானவரும் குரூரத்தை அனுபவிப்பவரும் திருமணம் நடந்து
விடும். அவர்கள்தான் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள்.
ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்கின்றனர். ஆனால் என்ன வகையான தேவை இது.அவர்கள் இருவரும் பைத்தியங்கள். அவர்கள் இம்சை கொண்ட வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால்மற்றபடி ஒவ்வொரு திருமணமும் தோல்வியடைப் போகிறது, ஒரே ஒரு காரணத்தால். அந்த அச்சுப் பதிவு தான் பிரச்னை.
திருமணத்தில் கூட நீ எந்த அடிப்படை காரணத்திற்காக உறவை ஏற்படுத்திக் கொள்கிறாயோ அது நிறைவேறுவதில்லை. நீ ஒருமையில்
இருப்பதை விட உன் மனைவியுடன் இருக்கும்போது அதிக தனிமையாக உணர்கிறாய். ஒருகணவனையும் மனைவியையும் ஒரு அறையில் தனியே விடுவது அவர்களை மேலும் அதிக துன்பமடைபவர்களாக ஆக்கும்.
எனது நண்பர்களில் ஒருவன் ஓய்வு பெற்றான். அவன் மிகப் பெரிய தொழிலதிபர். அவன் எனது அறிவுரையின் பேரில் ஓய்வு பெற்றான். நான் அவனிடம், உன்னிடம் ஏகப்பட்ட செல்வம் உள்ளது, உனக்கு மகன் இல்லை. இரண்டு பெண்கள் மட்டும்தான். அவர்களையும் பணக்கார இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டாய். இப்போது ஏன் தேவையில்லாமல் இந்த தொழில், வருமான வரி, இது அது என்று எல்லா கவலைகளையும் பட்டுக் கொண்டிருக்கிறாய். எல்லாவற்றையும் மூடிவிடு.
உன்னிடம் போதுமான அளவு செல்வம் இருக்கிறது. நீ ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும் இதுபோதும். என்றேன்.
அவன் அது உண்மை தான். ஆனால் உண்மையான பிரச்னை தொழிலல்ல. நான் எனது
மனைவியுடன் தனித்து விடப்படுவேன் என்பதுதான் உண்மையான பிரச்னை.
நான் இப்போதே என் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று விடுவேன். ஆனால் நீங்கள் வந்து
எங்களுடன் வசிக்க வேண்டும் என்றான்.
நான், இது வித்தியாசமாக இருக்கிறதே. நீ
ஓய்வு பெறுகிறாயா அல்லது நான் ஓய்வு பெறுகிறேனா என்றேன்.
அவன் இதுதான் நிபந்தனை. நான் இந்த பிரச்னைகளை விரும்புகிறேன் என்றா
நீங்கள் நினைக்கிறீர்கள் இதை என் மனைவியிடமிருந்து
தப்பிக்கத்தான் செய்கிறேன் என்றான்.
அவனது மனைவி ஒரு சமுக சேவகி. அவள் ஒரு அனாதை ஆசிரமம், பிச்சைக்காரர்களுக்கான ஆஸ்பத்திரி, ஒரு விதவைகளுக்கான இல்லம் என
எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருக்கிறாள். நான் மாலையில் அவளிடம், காலையிலிருந்து மாலை வரை நீங்கள்
செய்யும் எல்லா செயல்களையும் விரும்பி செய்கிறீர்களா என்று கேட்டேன்.
அவள், அனுபவிப்பதா இது ஒரு வகையான
தப்பித்தல், தனக்குத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் என்றாள்.
நான் ஏன் நீங்கள் உங்களையே இப்படி துன்புறுத்திக் கொள்கிறீர்கள்
என்று கேட்டேன்.
அவள் உங்களது நண்பரை தவிர்க்கத்தான். நாங்கள் இருவரும் தனித்திருந்தால்
அதுதான் வாழ்விலேயே மோசமான அனுபவம். என்றாள்.
மேலும் இது காதல் திருமணம், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்
அல்ல. அவர்கள் முழு குடும்பத்தையும், சமுதாயத்தையும் எதிர்த்து
திருமணம் செய்து கொண்டனர். ஏனெனில் அவர்கள் வேறுபட்ட மதம், ஜாதியை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களது அச்சு பதிவு இவன்தான் சரியான ஆண் என்றும், இவள்தான் சரியான பெண் என்றும் அறிகுறி காட்டியது. ஆனால் இது எல்லாமே தன்னுணர்வற்ற மனநிலையில் நிகழ்ந்தது.
இதனால்தான் குறிப்பிட்ட ஆண் அல்லது பெண்ணிடம்
உனக்கு ஏன் காதல் வந்தது என்ற கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடிவதில்லை. அது ஒருஉணர்வோடு எடுத்த முடிவல்ல. அது உனது தன்னுணர்வற்ற மனதில் பதிந்துள்ளஅச்சுப்பதிவினால் எடுக்கப்பட்ட முடிவு.
அமியோ, இந்த முழு முயற்சியும் – உறவோ அல்லது ஆயிரத்தோரு
விஷயங்களில் மும்மரமாக இருப்பதோ – நீ தனிமையில் இருக்கிறாய் என்ற
கருத்தினால் அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியே. இங்குதான் தியானம் செய்யும்
மனிதனும் சாதாரண மனிதனும் வேறுபடுகிறார்கள் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக சொல்லவிரும்புகிறேன்.
சாதாரண மனிதன் தனது தனிமையை மறக்க விரும்புகிறான். தியானிப்பவன் மேலும்
மேலும் தனது ஒருமையை அதிகம் தெரிந்து கொள்கிறான். அவன்
இந்த உலகத்தை விட்டு செல்கிறான். குகைகளுக்கு, மலைகளுக்கு, காட்டுக்கு ஒருமையில்இருப்பதற்காகவே போகிறான். தான் யாரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். கூட்டத்தில் அது கஷ்டம். அங்கு பல இடைசல்கள் இருக்கும் தங்களது ஒருமையை தெரிந்து கொள்பவர் யாரோ அவர்களே மனித இனத்துக்கு சாத்தியப்படக் கூடிய அளவில்லா சந்தோஷத்தை அறிந்து கொள்பவர். ஏனெனில் உனது இருப்பே ஒரு வரம்தான்.
உனது ஒருமையுடன் நீ லயப்பட்டபின் நீ தொடர்பு கொள்ளலாம், அப்போது உனது உறவுகள் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும், ஏனெனில் அவை பயத்தால் அமைந்தவை
அல்ல. உனது ஒருமையை கண்டு கொண்டபின் நீ உருவாக்கலாம், நீ எத்தனை விஷயங்களைவிரும்புகிறாயோ அத்தனை விஷயங்களிலும் ஈடுபடலாம், ஏனெனில் இந்த ஈடுபாடுஉன்னிலிருந்து நீ தப்பி ஓடுவதாக இருக்காது. இப்போது அது உனது
வெளிப்பாடு. இப்போது அது உனது திறமையின் வெளிப்பாட்டுத் தோற்றம்.
அப்படிபட்ட மனிதன் மட்டுமே – அவன் ஒருவனாக வாழ்ந்தாலும் சரி, சமுதாயத்தில் இருந்தாலும் சரி, அவன் திருமணம் செய்து கொண்டாலும்
சரி, திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தாலும் சரி, அது எந்த வித்தியாசத்தையும்
ஏற்படுத்தாது – எப்போதுமே ஆனந்தமாகவும் அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பான். அவனது வாழ்வே ஒரு கானம், ஒரு நடனம், ஒரு மலர்தல், ஒரு மணம்தான். அவன் எதை செய்தாலும் அவன் தனது மணத்தை அதில் கொண்டு வருவான்.
அதனால் உனது ஒருமையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும்
அடிப்படையான விஷயம்.
இப்படி உன்னிடமிருந்து நீ தப்பிப்பது நீ கூட்டத்தலிருந்து கற்றுக் கொண்ட விஷயம். ஏனெனில் ஒவ்வொருவரும் தப்பிக்கிறார்கள். நீயும் தப்ப ஆரம்பிக்கிறாய். ஒவ்வொரு குழந்தையும் கூட்டத்தில் பிறக்கிறது, அவர்களை பார்த்து அதே போல போலியாக
செய்ய ஆரம்பிக்கிறது, மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ
அதுவும் அதையே செய்ய ஆரம்பிக்கிறது. மற்றவர்கள் எந்த விதமான துயரமான நிலையில்இருக்கிறார்களோ அதுவும் அதே போன்ற துயர நிலைக்குள் விழுகிறான். இதுதான் வாழ்க்கைஎன்பது என அவன் நினைக்க ஆரம்பித்து விடுகிறான். அவன் வாழ்க்கையை முழுமையாக தவற விட்டு விடுகிறான்.
அதனால் ஒருமையை தனிமை என தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என நான் உனக்கு
நினைவூட்டுகிறேன். தனிமை என்பது ஆரோக்கியமற்றது, நோய் போன்றது. ஒருமை என்பதுமுற்றிலும் மிக ஆரோக்கியமானது.
நாம் எல்லோரும் ஒரேவிதமான தவறாக புரிந்து கொள்ளுதலை தொடர்ந்து செய்து
கொண்டே வந்திருக்கிறோம்.
வாழ்வின் அர்த்தத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் கண்டு பிடிக்க முதலாவதும் முக்கியமாகவும் செய்ய வேண்டிய முதல் படி தனது
ஒருமைக்குள் நுழைவதுதான் என்பதை எனது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நான்
விரும்புகிறேன். அதுதான் உனது கோவில், அங்கேதான் உனது கடவுள் வசிக்கிறார், நீ இந்த கோவிலை வேறெங்கும் காண முடியாது. நீ சந்திரனுக்கு செவ்வாய்க்கு …………என
போகலாம்.
நீ ஒருமுறை உன் இருப்பின் உள் மையத்திற்க்குள் நுழைந்துவிட்டால், உன்னால் உனது கண்களையே நம்ப முடியாது. நீ உன்னுள் அவ்வளவு மகிழ்ச்சியை, அவ்வளவு அன்பை, அவ்வளவு ஆசிகளை சுமந்து கொண்டிருக்கிறாய். நீ உன்னுடைய
சொந்த புதையலிலிருந்தே தப்பி ஓடிக் கொண்டிருக்கிறாய்.
இந்த புதையலையும் இதன் குறையாத வளத்தையும் பற்றி தெரிந்து கொண்டு விட்டால் பின் நீ உறவு ஏற்படுத்திக் கொள்ளலாம். உருவாக்குதலிக்குள் நுழையலாம். நீ உனது அன்பை பகிர்ந்து கொள்ளுதலின் மூலம் மனிதர்களுக்கு உதவலாம், அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளாமல் இருக்கலாம். நீ உனது அன்பின்
மூலம் அவர்களுக்கு ஒரு மதிப்பு கொடுக்கிறாய், நீ அவர்களது மரியாதையை அழிப்பதில்லை. எந்த முயற்சியும் இல்லாமல் மற்றவர்கள் தங்களது சொந்த புதையலை கண்டுகொள்ள ஆதாரமாக நீ மாறுகிறாய். நீ என்ன உருவாக்கினாலும், நீ எதை செய்தாலும், நீ உன்னுடைய மௌனத்தை, அமைதியை, சாந்தத்தை, வாழ்த்துக்களை சாத்தியப்படும் எல்லாவற்றிலும் பரப்புவாய்.
ஆனால் இந்த அடிப்படையான விஷயம் எந்த குடும்பத்தாலும், எந்த சமுதாயத்தாலும், எந்த பல்கலைகழகத்தாலும் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. மக்கள் துயரத்திலேயே வாழ்ந்து அதற்கு பழக்கப்பட்டு போய் விடுகிறார்கள். எல்லோரும் துன்ப்படுவதால் நீ துயரப்படுவது பெரிதாக தெரிவதில்லை. நீ விதிவிலக்காக இருக்க முடியாது என தோன்றி விடுகிறது.
ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன். நீ விதி விலக்காக இருக்க முடியும். நீ
அதற்கான சரியான முயற்சியை எடுக்க வில்லை, அவ்வளவுதான்.
Source : THE GOLDEN FUTURE CHEPTER # 6 Q # 1