Friday 24 April 2015

முடிவெடுக்கும் மனம் - ஓம் - ஓஷோ

        ஒருமுறை நீ முடிவெடுத்து விட்டால் பின் எல்லா சந்தேகங்களையும் விட்டு விடு. அதற்கு முன் அதை உபயோகி. சந்தேகத்தை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய். அனைத்து சாத்தியக்கூறுகளையும் யோசி, பின் தேர்ந்தெடு.

உறுதியில்லாத மனிதன், முடிவெடுக்க முடியாத மனிதன் சந்தேகத்தில் இருப்பான். அதுஇணைப்புணர்வுக்கு எதிரானது. ஏனெனில் இணைப்புணர்வு தன்னிடம் இணைப்புணர்வுகொள்வது. சந்தேகம் தன்மேல் நிச்சயமற்றதனம். நீ உன்னிடமே இணைப்புணர்வோடில்லை..

நீ எதை செய்தாலும் நீ அதை செய்ய விரும்புகிறாயா இல்லையா அதனுள் போவது நல்லதாஇல்லையா என்பதில் உனக்கு உறுதி இல்லை. முடிவெடுப்பது அங்கில்லை. முடிவெடுக்கும் மனம் இல்லாமல் நீ பாதையினுள் நுழைய முடியாது. நீ முடிவெடுக்க வேண்டும். தீர்மானிக்க வேண்டும். உன்னுள் எப்போதும் ஒரு பகுதி வேண்டாம் என்றே சொல்லும் போது
எப்படி முடிவெடுப்பது அது சிரமம்தான்.
உன்னால்முடிந்த அளவு யோசனை செய். எவ்வளவு நேரம் கொடுக்க முடியுமோ அவ்வளவு நேரம் கொடு. எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும், எல்லா விதமான மாற்று வழிகளையும்யோசித்துப் பார். பின் முடிவெடு. ஒருமுறை நீ முடிவெடுத்து விட்டால் பின் எல்லாசந்தேகங்களையும் விட்டு விடு. அதற்கு முன் அதை உபயோகி. உன்னால் என்னவெல்லாம்சந்தேகப்பட முடியுமோ அத்தனையும் செய். அனைத்து விதமான சாத்தியங்களையும்
யோசித்துப்பார். பின் தேர்ந்தெடு. ஆரம்பத்தில் அது முழுமையான முடிவாக இருக்காது. அது சாத்தியமில்லை. அது அதிகபட்சமான முடிவாக இருக்கும். உனது பெரும்பான்மை மனது சரி என்று சொன்ன முடிவாக இருக்கும்.
ஒருமுறை நீ தீர்மானித்துவிட்டால் பின் சந்தேகப்படாதே. சந்தேகம் தன் தலையை தூக்கும். ஆனால் நீ நான் முடிவெடுத்து விட்டேன். முடிந்தது. இது முழுமையான முடிவல்ல. எல்லா சந்தேகங்களும் தெளிவு பெற வில்லை, ஆயினும் நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு நான் யோசனை செய்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்று நீ அதனிடம் சொல்லி விடலாம்.
ஒரு முறை நீ தேர்ந்தெடுத்து விட்டால் பின் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காதே,
ஏனெனில் சந்தேகம் நீ இடம் கொடுப்பதால் மட்டுமே இருக்கும். நீ அதைப் பற்றி திரும்ப திரும்ப நினைப்பதன் மூலம் அதற்கு சக்தி கொடுக்கிறாய். பின் ஒரு நிச்சியமற்ற தன்மை உருவாகிறது. முடிவெடுக்க முடியாத நிலை ஒரு மிக மோசமான விஷயமாகும். நீ மிக மோசமான நிலையில் இருக்கிறாய் என்பதைத்தான் அது காட்டுகிறது. உன்னால் எதையும் தீர்மானிக்க
முடியாத போது நீ என்ன செய்ய முடியும் உன்னால் எப்படி செயல்பட முடியும்.
ஓம். இந்த நாதமும் தியானமும் உதவக் கூடும். அது உதவும். ஏனெனில் நீ அமைதியாகமௌனத்தில் ஆழும்போது முடிவெடுப்பது எளிதாக இருக்கும். அப்போது நீ ஒரு கூட்டமல்ல,குழப்பத்தில் இல்லை. பல குரல்கள் சேர்ந்து கேட்கும்போது எது உன்னுடைய குரல் என்றுஉன்னால் அடையாளம் காண முடியாது. ஓம் என்று உச்சரி, அதன் மேல் தியானி. – குரல்கள்
அமைதியாகும். பலகுரல்கள் கேட்கும்…. இருப்பினும் அவை உன்னுடையது அல்ல என்பதைஇப்போது உன்னால் பார்க்க முடியும். உனது அம்மா, அப்பா, ஆசிரியர், சகோதரர்கள் ஆகியோரின் குரல்கள் – இவை எதுவும் உன்னுடையது அல்ல. நீ அவற்றை புறம் தள்ளி விடலாம், ஏனெனில் அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை.
ஓம் என்று உச்சரித்து மௌனமாகும்போது நீ சாந்தமாக, தெளிவாக, அமைதியாக,
ஒருமுகப்படுபவனாக, மாறுவாய். அந்த மோனத்தில் எது உண்மையான குரல் என்று உன்னால்பார்க்க முடியும். உன்னுள் இருந்து எழும் உறுதியான குரலை உன்னால் கேட்க முடியும்.
நீ சந்தைக்கடையில் நிற்கும்போது பலர் பேசிக் கொண்டும் பல விஷயங்கள் நடந்து கொண்டும் இருக்கும் போது என்ன நடக்கிறதென்று உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போகும். சந்தைக்கடையில் மக்கள் சத்தமிடுவர் – அவர்களுக்கு அவர்கள் மொழி தெரியும் ஆனால் உனக்கு அது என்ன என்று புரியாது. அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என
நீ நினைப்பாய்.
அப்போது – நீ ஒரு இமயமலைபகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்குப்  போய் அங்கு ஒரு மலை குகையில் உட்கார்ந்து இருப்பதைப் போல – ஓம் என்று உச்சரிக்க ஆரம்பி. நீ நிதானமடைவதை, எல்லா பதட்டங்களும் குறைவதை, நீ ஒன்றாவதை, நீ ஒருங்கிணைவதை நீ உணர்வாய். அந்த கணத்தில் தீர்மானித்தல்
சாத்தியப்படும். அப்போது முடிவெடு. பின் திரும்பி பார்க்காதே. பின் மறந்து விடு.
முடிவெடுத்தாகி விட்டது. இப்போது திரும்பி பார்ப்பது கிடையாது. முன்னோக்கி
செல்லுதல் மட்டுமே.
சில சமயங்களில் சந்தேகம் நாய் போல உன்னை தொடர்ந்து வந்து குரைக்கும். அதைகவனிக்காதே, அதில் கவனம் செலுத்தாதே. மெதுமெதுவாக அது நின்று விடும். அதற்கு ஒருவாய்ப்பு கொடு, எல்லா சாத்தியங்களையும் யோசனை செய். ஆனால் ஒரு முறைமுடிவெடுத்துவிட்டால் பின் சந்தேகத்தை விட்டு விடு. ஓம் நாதம் தீர்மானம் செய்ய, ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும்.

Monday 13 April 2015

கோபம் பற்றி Osho

  கேள்வி:  கோபம் என்பது என்ன ? சிக்கலான சந்தர்ப்பங்களில் பொறுப்போடும் அதே சமயம்சாந்தமாகவும் ஒன்றிணைந்தவனாகவும் இருப்பது எப்படி ?

பதில்: கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது
விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை
தடுக்கிறார்கள், ஒரு தடங்கலாக இருக்கிறார்கள். உனது சக்தி முழுமையும் ஒன்றை பெற
விரும்புகிறது, யாரோ அந்த செயலை தடுக்கிறார்கள். நீ விரும்பியதை பெற முடியவில்லை.
அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடியசாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது. உன்னால் கோபத்தை தடுக்க முடியாது. ஏனெனில் கோபம் ஒரு தொடர் விளைவு, பின் விளைவு. ஆனால் அந்த பின் விளைவு நிகழாமல் இருக்க நீ ஏதாவது செய்யலாம்.
வாழ்வில் ஒன்றை மட்டும் நினைவில் கொள். வாழ்வா சாவா
என்ற கேள்வி வரும் அளவு எதையும் ஆழ்ந்து விருப்பப் படாதே. சிறிது
விளையாட்டுத்தனமாகவும் இரு.
விருப்பப் படாதே என்று நான் சொல்லவில்லை. – ஏனெனில்
அந்த ஆவல் உன்னுள் அழுத்தப்பட்டுவிடும், விருப்பம் கொள், ஆனால் அதைப்பற்றி சிறிது
விளையாட்டுத்தனத்தோடு இரு என்றுதான் சொல்கிறேன். கிடைத்தால் நல்லது,
கிடைக்காவிட்டால் பரவாயில்லை, அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் . விளையாடுபவர்போல இருந்து பழக வேண்டும்.
நாம் நமது ஆசைகளுடன் ஒன்று பட்டு விடுகிறோம். அது
தடைபடும்போது அல்லது தடுக்கப்படும்போது நமது சக்தியே தீயாகி விடுகிறது. அது உன்னைஎரிக்கிறது. அந்த நிலையில் கிட்டதட்ட மனம் தடுமாறிய நிலையில் நீ என்ன
வேண்டுமானாலும் செய்வாய் – பழி வாங்குவதற்காக. உன்னுடைய வாழ்வு முழுவதும்
தொடரக்கூடிய சங்கிலி தொடர் நிகழ்ச்சிகளை அது உருவாக்கும்.
நீ கோபத்தை நிறுத்த முயற்சி செய்யக்கூடாது. நீ செய்யவே
கூடாது. எந்த வகையிலாவது கோபம் கரைந்து போக வேண்டும். இல்லாவிடில் அது உன்னைஎரித்துவிடும். உன்னை அழித்துவிடும். நான் சொல்வது என்னவென்றால் அதன் வேர்களுக்குசெல். ஏதோ ஆசை தடைப்பட்டு, நிறைவேறாமல் உள்ளது. அந்த விரக்தி தான் கோபத்தைஉண்டாக்குகிறது. இதுதான் அதன் ஆணி வேராக இருக்கும்.
இது ஒருமுறை உன் இருப்பில் உரைத்து விட்டால் பின் எல்லாமும்
ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். கோபம் மறைந்து விடும், அப்படி அது மறைவது உனக்கு ஒரு
புது ஆச்சரியமாக இருக்கும் ஏனெனில் கோபம் மறையும் போது அது அதன்பின் கருணையும்
அன்பும் நட்பும் நிறைந்த அளவற்ற ஆற்றலை விட்டு செல்லும்.

Friday 10 April 2015

புராணக் கதைகளின் பின்னால்...

இந்திய புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள்!! 

சூரியக் குடும்பம் நமது ரிக் வேதத்திலேயே, " சூரியன் தன்னை தானே சுற்றி வருவதாகவும், இது பூமி மற்றும் மற்ற கோள்களை தன் ஈர்ப்பு விசையின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும். அந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ரிக் வேதத்தில் ஓர் குறிப்பில், பூமி தன்னை தானே சுற்றியப்படி சூரியனை சுற்றி வருவதாகவும், பூமியில் உள்ள உயிர்களும் அதனுடன் சேர்ந்து பயணிக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது

ஒளியின் வேகம் வேத ரிஷிகளில் ஒருவரான சயனா ரிஷி 14 ஆம் நூற்றாண்டிலேயே ஒளியின் வேகத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது என்னவென்றில், " 2,202 யோஜனாவை அரை நிமிஷாவில் பயணிக்கும் சூரியனை நான் வணங்குகிறேன்" என்பது போல கூறியிருக்கிறார். ஒரு யோஜனா என்பது ஏறத்தாழ 9 மைல்கள் ஆகும். நிமிஷா என்பது 16/75 வினாடி ஆகும். ஆதலால், 2,202 (யோஜனா) x 9 (மைல்) x 75/8 (நிமிஷா) = 185,794 (வினாடிக்கு, மைல் தூரம்) அறிவியலில் இப்போது ஒளியின் வேகமென வினாடிக்கு 186,282.397 மைல் தூரம் என்று கூறப்படுகிறது. ஏறத்தாழ சயனா ரிஷி கூறியிருப்பது ஒத்துப்போகிறது

ரிக் வேதத்தில் மற்றுமொரு இடத்தில், "கதிரவனே, நீ பரிசளித்த ஒளிக்கு நீயே திரையாகி மறைக்கும் பொழுதில் புவி இருள் சூழ்ந்து திகைக்கிறதே" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, சூரிய ஒளியின் மூலம் ஒளிப் பெற்று இயங்கும் நிலவை கிரகணத்தின் பொழுது சூரியனே மறைக்கும் தருணத்தில் பூமி ஒளியின்றி காணப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

சூரியன், பூமிக்கு இடையேயான தூரம்

துளசிதாஸ் அவர்கள் இயற்றிய அனுமன் சாலிஸாவில், "ஆயிரம் யோஜனாக்கள் தாண்டி இருக்கும் சூரியனை பழம் என நினைத்து அனுமன் உண்டான்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, 1 யுகம் = 12,000 வருடங்கள், 1 சாஸ்ர யுகம் என்பது = 1,20,00,000 வருடங்கள், மற்றும் 1 யோஜனா என்பது ஏறத்தாழ 8 முதல் 9 மைல்கள். "Yug sahsra yojana par bhanu, leelyo taahi madhura phal jaanu" என்று சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 153,6000,000 கி.மீ தூரம் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றைய அறிவியலில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான தூரம் என்று, 152,000,000 கி.மீ என்று கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏறத்தாழ சரியாகக் கணக்கிட்டுள்ளனர்

பிரம்மகுப்தா, 7ஆம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவு 36,000 கி.மீ என்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய அறிவியல் 40,075 கி.மீ அன்று கூறுகிறது. 1% தவறு இருந்தாலும் ஏறத்தாழ எந்த கருவியும் இன்றி பிரம்மகுப்தா அவர்கள் கூறியிருக்கிறா

சூரிய சித்தார்ந்தா, ஓர் வருடத்தின் அளவை நான்கு வகையில் அளந்து கணக்கிட முடியும் என்று கூறுகிறார். அதை, நட்சத்திரா, சவனா, லூனார் மற்றும் சவுரா என்றும் குறிப்பிடுகிறார். இதில், சவுரா எனும் முறையில் சரியாக 365 நாள், 6 மணி நேரம், 12 நிமிடங்கள், 30 வினாடிகள் என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கான சான்று "குனார்க்" கோவிலில் இருக்கிறது. சந்தேகம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்.

உலகிலேயே முதல் முறையாக இந்து சமவெளி நாகரீகத்தில் தான் வடிகால் அமைப்பு அமைக்கப்பட்டது. கி.மு 3300 - 1300 காலக்கட்டத்திலேயே இதை பயன்படுத்தியுள்ளனர்.

9000 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய சூத்திரங்களில் ஆயிரக்கணகான வியாதிகளுக்கு, 700 வகையான மூலிகைகளின் மூலம் மருத்துவ குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகளும் கூறப்பட்டிருக்கின்றன.