Thursday 7 April 2016

மனம் மனம்

இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல.
ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு.
சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன.
சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர்.
சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும்
எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன.
இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல்லை. இவை நம்மை வழிநடத்த நாம் எருமை மாடுகள் போல் tongue emoticon
இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.
நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும்நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் (90 %) இல்லாமல் போய்விடும்
. ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும்.
மனதிற்காக நாம் வாழவில்லை.மனதை சரியான வழியில் பயன்படுத்தக்கூடியவழிநடத்தக்கூ
டிய ஒரே சக்தி.
நம் பிரக்ஞை மட்டுமே
--- ஓஷோ ---

No comments:

Post a Comment