1. சுத்தமே இறை வழிபாடு என்று தோன்றும்.
2. செயல்கள் செய்வதைவிட நடக்கட்டும் என்று விட்டுவிடத் தோன்றும்.
3. அடிக்கடி சிரிப்பு வரும்.
4. இயற்கையோடும் சுற்றி இருப்பவர்களோடும் இணைப்புணர்வு தோன்றும்.
5. அடுத்தவர்களைப் பாரட்டுதல் அதிகம் நடக்கும்.
6. இறந்த கால அனுபவங்களின் பயமுறுத்தல்களிலிருந்து செயல்படாமல், இயல்பாகவும் நடப்பதை ஏற்றும் செயல்படத் தோன்றும்.
7. இந்தக் கணத்தை அனுபவிக்கும் ஆற்றல் அதிகமாகும்.
8. கவலைப்படும் சக்தி குறைந்துபோகும்.
9. தகராறு செய்யும் சக்தி குறைந்துபோகும்.
10. மற்றவர்களை எடைபோடுவது வீண்வேலையாகத் தோன்றும்.
11. தன்னை எடைபோட்டுக் கொண்டேயிருப்பதிலும் சலிப்பு தோன்றும்.
12. மற்றவர் செயல்களை வியாக்கியானம் செய்வதில் ஆர்வம் குறையும்.
13. இருக்கும் நம்பிக்கைகள் எல்லாம் அழிய ஆரம்பிக்கும். புதிய நம்பிக்கை கொள்ளவும் முடியாது.
14. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு தோன்ற ஆரம்பிக்கும்.
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
நீங்கள் மனத்திலிருந்து இதயத்தை நோக்கிச் சாயுங்கள். அதுவே முதல் மாற்றம். குறைவாக எண்ணுங்கள், அதிகம் உணருங்கள். அறிவுபூர்வமாக இருப்பதைக் குறையுங்கள், உள்ளுணர்வை அதிகப்படுத்துங்கள். எண்ணிக் கொள்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை, அது நீங்கள் மாபெரும் காரியங்களைச் செய்வதாக உணரச் செய்யும். ஆனால் உண்மையில் நீங்கள் ஆகாயக் கோட்டைகள்தான் கட்டுவீர்கள். எண்ணங்கள் வெறும் ஆகாயக் கோட்டைகள் அல்லாமல் வேறொன்றும் இல்லை.
ithu maathiri post panrathu thaan வியாதியின் அறிகுறிகள்
ReplyDelete