Friday 10 June 2016

பொழுது போக்கு....


பொழுது போக்கு என்பது எப்படியோ உன்னை இழுத்து வைத்துக் கொண்டிருக்க ஒரு வழி தான்.
எல்லாப் பொழுது போக்குகளும் உன்னிடமிருந்தே நீ தப்பித்துக் கொள்ள செய்யும் முயற்சிகள்தான்.
எனக்கு என்னிடமே ஆனந்தம் பெற முடிகிறது.
தனியே இருப்பதும் சும்மா இருப்பதும் பெரிய ஆனந்தம்.
ஒரு முறை அதை அனுபவித்து விட்டால் பொழுது போக்கு என்ற முட்டாள்தனம் தேவையில்லை.
பொழுதுபோக்கு என்பது வேலைக்கு வேறு பெயர்தானே.
உண்மையான வேலையென்று ஏதும் இல்லாத போது,
இப்படிப் போலி வேளைகளில் பொழுதைப் போக்குகிறாய்.
ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஏதாவது செய்து கொண்டிருப்பாய்.
சம்பளம் இல்லை என்ற காரணத்தால் சீட்டாட்டமும் செஸ் விளையாட்டும் வேலை இல்லை என்றாகி விடுமா?
பொழுது போக்குகளை விட்டு சந்தர்ப்பங்களைத்தேடிப் பார்
.செய்வதற்கு ஏதும் இல்லாத போது
உன்னோடே இருந்து பார்
.அதை விட்டு வெளியே வராமல் இருந்து பார்.
--- ஓஷோ ---

No comments:

Post a Comment