கேள்வி : தினசரி ஒரு மணிநேரம் தியானம் செய்பவர் இந்தப் பிறவியிலேயே ஞானவிழிப்பு பெற வாய்ப்பு உண்டா?
ஓஷோ பதில்: உலகத்தில் வாழ்ந்த உண்மையான தியானிகள் ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதாவது ஒருவன் ஞான விழிப்பு பெறுவதற்கு 48 நிமிடம் தொடர்ந்த தியானமே போதுமானது என்பதாகும்!
ஆனால் இது அவ்வளவு சுலபமில்லை!
ஒரே ஒருநிமிடம் (60 விநாடிகள்) உண்மையான மனக்குறுக்கீடு எதுவும் இல்லாமல் தியானம் செய்வது என்பது கடினமான காரியமாகும் !
ஆனால் முடியாதது அல்ல! இதை நீங்கள் பரிசோதனை செய்துப்பாருங்கள் .
கடிகாரத்தில் உள்ள விநாடி முள்ளை 1-லிருந்து 60 வினாடிக்கு நகருவதைக் கூர்ந்து கவனியுங்கள்.
அதை வெறுமனே சாட்சியாக கவனியுங்கள்.
அதிகபட்சமாக அந்த வினாடி முள் 10-ஐத் தாண்டுவதற்குள் உங்கள் கவனம் வேறு எங்கேயோ சென்றுவிடும்!
இதைக் கவனித்து மீண்டும் உங்கள் கவனத்தை அந்த முள்ளின்மேல் வைப்பதற்குள் மேலும் சில வினாடிகள் கழிந்துவிடும்.
இப்படி நாள்தோறும் பயிற்சி செய்தால், ஒரு சில நாட்களுக்குள் ஒரு நிமிட தியானத்தை நீங்கள் அமைதியாக இடைவெளியில்லாமல், கவனச் சிதைவு இல்லாமல் வெறுமனே செய்ய முடியும்.
ஆசார வழிமுறையும் இதுவேதான்.
நீங்கள் உங்கள் சுவாசத்தை வெறுமனே கவனித்துக் கொண்டிருக்கவேண்டும்.
இதைத்தான் புத்தர் கடைப்பிடித்தார். இது விஞ்ஞானப் பூர்வமானது.
நீங்கள் வெறும் கவனிப்பவராக இருங்கள் போதும்.
இப்படி நீங்கள் 48 நிமிடம் தொடர்ந்து செய்துவிட்டால், நீங்கள் அன்றே ஞானவிழிப்பு அடைந்து விடலாம்!
ஆனால் நடைமுறையில் இந்த 48 நிமிட தியானத்தை அடைய பல வருடங்கள் ஆகலாம்!
நீங்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக, வைராக்கியமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு சீக்கிரம் உங்களுக்கு ஞானவிழிப்பு கிட்டும்!
நீங்கள் அந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மையில் மிகுந்த ஓய்வுத் தன்மையில், விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!